இந்நிலையில், இந்திராவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று மாலை வெள்ளாளபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆஸ்பத்திரியில் இருந்த சுகாதார பணியாளர்கள், இந்திராவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிரசவத்திற்கு பின் கவனக்குறைவாக இருந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த கொங்கணாபுரம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு