இதனால் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விக்னேஷ் எதிர்திசையில் வாகனங்கள் வரும் பாதையில் ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே சங்ககிரி நோக்கி வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட இருவாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி