இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின் ரோட்டு ஓரமாக மரத்தின் மீது பஸ் மோதி நின்றுள்ளது. இதில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் மயக்கம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி டிரைவர் செல்வம் உயிரிழந்தார். டிரைவர் செல்வம் பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி