ஜலகண்டாபுரத்தில் ரூ. 20¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஜலகண்டாபுரம் கிளை இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி, சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, வனவாசி, பெருந்துறை, நரியம்பட்டி, அரியாம்பட்டி, சின்னானூர், வாத்திப்பட்டி, ஊத்துக்குளி, காங்கேயம், முத்தூர், விஜயமங்கலம், வாழப்பாடி, 

அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய் வரத்து மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் 195 மூட்டைகள் ரூ. 10.96 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த வாரத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. 340 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தரம் ஒரு கிலோ ரூ. 123.10 முதல் ரூ. 144 வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ. 80.10 முதல் ரூ 122 வரை ஏலம் போனது. நேற்று 340 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ. 20 லட்சத்து 36 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி