இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலையின் எதிர்த் திசையில் சிவா, சேகர் வந்த இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துத் துடித்து உயிரிழந்தார். அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிப் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காகச் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டாரஸ் லாரியின் டிரைவர் தப்பி ஓடிய நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு