மஞ்சனி சூறைகாற்று மரம் விழுந்து சுற்றுலா வேன் சேதம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் சுற்றுலா வேன் சென்றது அப்போது மஞ்சினி சாலையில் வேன் சென்றபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் சூறாவளி வீசியது இதனால் அப்பகுதியில் இருந்த புளியமரம் முறிந்து சுற்றுலா வேன் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இதில் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். சுற்றுலா வேனின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தற்போது புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி