அப்போது அங்கு வந்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பல வியாபாரி கணேசன் (55) என்பவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீராம் குடும்பப் பிரச்சினை தொடர்பாக பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், ஸ்ரீராமின் கழுத்தில் கத்தியால் குத்த முயன்றபோது அவரது தலைப்பகுதியில் கத்தி குத்து விழுந்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ஆத்தூர் நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள பல வியாபாரி கணேசனை தேடி வருகின்றனர்.