சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் மூன்று தலைமுறையாக வாரச்சந்தை இயங்கி வந்தது. இந்த வாரச் சந்தையை புதுப்பிப்பதாக கூறி ஓராண்டுகளுக்கு முன்பே வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு காலி செய்ய பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பின்னர் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை கட்டமைப்புத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரச்சந்தை திறக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் அங்கு கடை வைத்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் உடனடியாக வாரச்சந்தையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பட்டுள்ளது.