நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு அப்பகுதியை கடக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரிலேயே மின் கேபிள்கள் தாழ்வாக தொங்கும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கருப்பு நிறத்தில் இருக்கும் கேபிள்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் கேபிள்கள் கழுத்தில் சிக்கி விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும், கேபிள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்