கடையில் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு கடைப்பகுதியில் படுத்திருப்பது போல் நோட்டமிட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளர் வேல்முருகன் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.