வாழப்பாடி: காதலியின் கழுத்தை அறுத்த காதலன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் பகுதியில் சேர்ந்த கோவிந்தன் மகன் சின்ராஜ் என்பவருக்கும் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் சேலம் கணவாய் காடு பகுதியைச் சேர்ந்த வேடராஜன் என்பவருக்கும் வனிதாவுக்கும் திருமணத்திற்கு முன்பாகவே பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வேடராஜன் வாழப்பாடிக்கு வனிதாவை பார்ப்பதற்காக இன்று வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வனிதாவை வேடராஜன் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

கோபமடைந்த வேடராஜன் வனிதாவை கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்தை சரமாரியாக அறுத்து தானும் தனது கையை அறுத்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடராஜனை துரத்தியுள்ளனர். காயம் அடைந்த வனிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாழப்பாடி போலீசார் வேடராஜனை பிடித்து வாழப்பாடி மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி