ஆத்தூர் வாரசந்தை தேங்கி ய மழைநீர்பொதுமக்கள் வியாபாரிகள் அவதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சந்தை திடல் பகுதியில் வியாழக்கிழமை தோறும் சந்தை கூடும். இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த இரு நாட்களாக சந்தை திடல் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் காய்கறி வியாபாரிகளும், பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி