தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கரன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து, சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்.