ஆத்தூர் பைக் சாலை தடுப்பில் மோதி விபத்து வாலிபர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வைத்தியகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது கோகுல்ராஜ், புதிய இருசக்கர வாகனத்தில் தனது அக்காவிடம் காண்பிக்கச் சென்றபோது, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை தளவாய்பட்டி பிரிவு சாலை அருகே தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி