ஆத்தூர் அருகே மாரிமுத்து ரோடு பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து, நேற்று இரவு ஆத்தூர் ரயிலடி திரு பிரதான சாலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிவிட்டு திரும்பியபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக ஆத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.