இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒரு பவுன் தங்க நகையை கொள்ளையடித்தனர். இன்று காலை வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டின் உரிமையாளர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் பாபு ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
மர்ம கும்பல் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கட்டிட கூலி தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.