கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. இத்தனை திருப்பி எடுத்துக்கொள்வதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என TN உண்மை சரிபார்ப்பக்கம் கூறியுள்ளது.