திமுக-வினர் வாக்காளர்களுக்கு ரூ.8000 கூப்பன் கொடுத்ததாக அதிமுக-வினர் புகார் அளித்திருந்தனர். இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில், “தேர்தல் ஆணையம் வழங்கிய அந்த சான்றிதழ், மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக வழங்கப்பட்டது. அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு பயன்படுத்துவதற்கு இது பொருந்தாது” என குறிப்பிட்டுள்ளார்.