தமிழகத்தில் சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் 'தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இதன் மூலம் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பாரம்பரியச் சிறுதானியப் பயிர்களின் சாகுபடியை இருமடங்காக உயர்த்த ரூ.7.61 கோடி நிதி பயன்படுத்தப்படவுள்ளது.