ரூ.50,000 + ஒரு சவரன் தங்கம்.. அரசின் திருமண நிதியுதவி

தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் குறித்தும் பலரும் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். இதில் 2 வகையான திட்டம் இருக்கிறது. முதல் திட்டத்தில் ரூ. 25000 + 1 சவரன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்தில் ரூ.50000 + 1 சவரன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாள்கள் முன்பு இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி