மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்குகிறது. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். அதன்படி இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கும். மேலதிக தகவல்களை https://www.npscra.nsdl.co.in/scheme-details.php இணையதளத்தில் காணலாம்.