தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தர்பூசணி குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை கோரிய மனுவில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடை காலத்தில் மக்கள் அதிகம் வாங்கி உண்ணும் தர்பூசணியில் ரசாயனம் உள்ளது என கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.