தமிழ்நாடு அரசு கோடைகால சிறப்பு நிதியாக ஆண்டுதோறும் மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. சமீபத்தில் 3 மாத மகளிர் உரிமை தொகையுடன் சேர்த்து, கோடைகால நிதியும் இணைந்து ரூ.5,000 கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டுமுதல் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், மே மாதம் மட்டும் ரூ.4000 வழங்கப்படும்.