டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. தெரியாமல் OTP பகிர்ந்து பணத்தை இழந்திருந்தாலும் இந்த இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த இழப்பீட்டு தொகையை பெற முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.