வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யசோதா. இவர், குடியாத்தம் அருகே உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டதையடுத்து, வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது அவரது கணக்கில் ரூ.13 கோடி ஜிஎஸ்டி பாக்கி உள்ளதாகவும், அதனால் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தனது வங்கி கணக்கு தவறுதலாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.