கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 23-வது தவணை ரூ.1,000 இன்று (ஜூலை.15) மகளிர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 1.15 கோடி தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு ரூ.1000 செலுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு, இன்று முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் விடுபட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.