மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்கள் முகேஷ் பைரங்கி, சுனிதா தம்பதியினர். ஆனால், இவர்கள் பெரும்பாலும் வரன் பார்த்து தராமல் மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் மிகப்பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போகிறோம் என்று கூறி 42 மணமகன் வீட்டாரிடமிருந்து சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.