ஆன்மீகப் பயணிகளின் வசதிக்காக திருக்கடையூர், நாகூர் மற்றும் வேளாங்கண்ணியில் ஓய்வு இல்லங்கள் நிறுவப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஆன்மீகப் பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடத்துடன் இறையருளை பெற முடியும். இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இந்த திட்டங்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும்.