சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் இன்று (அக்., 30) கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் தாலுகாவில் மேல் பகுதியில் கனமழை மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோயம்பேடு, அசோக்நகர் உள்ளிட்ட பெருநகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.