பெங்களூரு: நேற்று (ஜூன் 4) நடந்த ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தது ஆர்.சி.பி. அணிதான் என்று கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். வெற்றிக் கொண்டாட்டம் நடத்த கர்நாடக அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை என்றும் ஆர்.சி.பி. வீரர்களை பெங்களூரு அழைத்து வந்தது அந்த அணி நிர்வாகிகள்தான் என்றும் அமைச்சர் பரமேஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.