ஐபிஎல் 61-வது லீக் போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக ஆர்சிபி 222 ரன்கள் குவித்துள்ளது. தரம்சாலாவில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி தரப்பில் விராட் கோலி (58 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (45 ரன்கள்) நிதானமாக ஆட, அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 48 பந்துகளில் 73 ரன்கள் வெளுத்து வாங்கினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்த ஆர்சிபி, பஞ்சாப்பிற்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.