தொண்டியில் பாய் மர படகு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் மகா சக்தி புரம் பகுதியில் அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. 

இந்த படகுப் போட்டி கடந்த 16 வருடங்களுக்குப் பிறகு இப்பகுதியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 25 படகுகள் கலந்துகொண்டன. மதியம் 2 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை வரை நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பணமும் கேடயமும் வழங்கப்பட்டது. கடற்கரைப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள்.

தொடர்புடைய செய்தி