தற்போது பெய்த மழையின் காரணமாக திருவாடானை பகுதிகளில் இருந்து வரும் உபரி நீர் இந்த கண்மாய்க்கு மட்டுமல்லாமல், அந்த பகுதியில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மணக்குடி வழியாக கடலில் சேருகிறது. அப்படி செம்பிலான்குடி கண்மாய்க்கு வரும் தண்ணீர் நிரம்பி வரும் நிலையில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்த செம்பிலான்குடி கண்மாய்க்கு சருக்கை என்று சொல்லப்படும் உபரி நீர் வெளியேற வழி வகையில்லை. இதனால் வருடா வருடம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதனால் பல லட்சம் வீணாகிறது மேலும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வாழ்வாதாரமான விவசாயத்தை காக்கும் வகையில் செம்பிலான்குடி கண்மாய்க்கு நிரந்தரமாக உபரி நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.