ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் பெரிய குழாயில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதற்காக அதை சரிசெய்யும் விதமாக சுமார் 100 அடி தூரம் புதிய குழாய் அமைத்து கசிவு ஏற்பட்ட பகுதிகளை நீக்கி புதிய குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுமிடத்து இன்று இரவுக்குள் சரிசெய்யப்பட்டு நாளை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!