அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மஞ்சள், பால், தயிர், தேன், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி