இந்த பவனியானது கோவில் அருகில் உள்ள புனித லெவே அடிகளார் கெபியில் தொடங்கி வீதிகளின் வழியாக குருக்கள் அனைவரும் முன் செல்ல அவர்களைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் குருத்தோலைகளை கைகளில் உயர்த்திப் பிடித்து தாவீது மகனுக்கு ஓசான்னா என்ற ஆரவார முழக்கத்தோடு பாடல்களை பாடிக்கொண்டு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்த வண்ணமாய் ஆலயத்திற்குள் பவனியாக சென்று நுழைந்தனர். அதைத்தொடர்ந்து பங்குத்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை அவர்களின் தலைமையில் அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா