ராமநாதபுரம், அக். 26 -
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் ஓர் செயல்பாடாக திருப்புல்லாணி, மண்டபம் மற்றும் கமுதி வட்டாரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முருங்கை விதைகளை வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முருங்கை விதைகளை நடவு செய்வதன் நோக்கம் என்னவென்றால் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகையின்றி ஆரோக்கியமான உடல்நிலையுடன் குழந்தைகள் பெற்றெடுக்க உதவும் வகையிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் வளர்ந்திடும் வகையிலும் அவர்களுக்கு வழங்கிடும் விதமாக முருங்கை விதைகள்நடவு செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத்துறையில். விதைகள்கொள்முதல் செய்யப்பட்டு நடவுசெய்யப்படுகின்றன.
நடவு செய்யப்படும் விதைகளை முறையாக பராமரித்து பயன்பெற பயனாளிகளுக்கு அறிவுறித்திடும் வகையிலும் அவற்றின் மருத்துவ தொடர்புடைய குணங்களை அறிந்திடும் வகையிலும் அங்கன்வாடி பணியாளர்கள், சமூக நலத்துறையின் களப்பணியாளர்கள்
ஒருங்கிணைந்து பராமரித்திடும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பயனாளிகள் தங்கள் வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, திட்டஅலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் விசுபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் ஓர் செயல்பாடாக திருப்புல்லாணி, மண்டபம் மற்றும் கமுதி வட்டாரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முருங்கை விதைகளை வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முருங்கை விதைகளை நடவு செய்வதன் நோக்கம் என்னவென்றால் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகையின்றி ஆரோக்கியமான உடல்நிலையுடன் குழந்தைகள் பெற்றெடுக்க உதவும் வகையிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் வளர்ந்திடும் வகையிலும் அவர்களுக்கு வழங்கிடும் விதமாக முருங்கை விதைகள்நடவு செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத்துறையில். விதைகள்கொள்முதல் செய்யப்பட்டு நடவுசெய்யப்படுகின்றன.
நடவு செய்யப்படும் விதைகளை முறையாக பராமரித்து பயன்பெற பயனாளிகளுக்கு அறிவுறித்திடும் வகையிலும் அவற்றின் மருத்துவ தொடர்புடைய குணங்களை அறிந்திடும் வகையிலும் அங்கன்வாடி பணியாளர்கள், சமூக நலத்துறையின் களப்பணியாளர்கள்
ஒருங்கிணைந்து பராமரித்திடும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பயனாளிகள் தங்கள் வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, திட்டஅலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் விசுபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.