ராமநாதபுரம்: அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே படப்பை கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழா நேற்று (மார்ச் 28)  இரவு தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. 

இதில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேடை அமைக்கப்பட்டு, அலங்கார விளக்குகள், டிஸ்கோ லைட் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய கலைகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

கலை நிகழ்ச்சிகளைக் கண்ட பெற்றோர்கள், பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரத்தை ஏற்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வினை முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்விற்கு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி