ராமநாதபுரம்: பைக் மீது பேருந்து மோதல்; விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). விவசாயி. இவர் கமுதியில் இருந்து சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது கே. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் பெருநாழியிலிருந்து கமுதி நோக்கி வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் பவுனு என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி