இராமநாதபுரம், ஆர். எஸ் மங்கலம் பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.