ராம்நாடு: படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை பகுதியைச் சேர்ந்த பால முருகனுக்கு சொந்தமான பைபர் படகில் கார்த்தி கேயன் சமய ஸ்ரீதரன் சக்தி குமார் பிரதாப் ஆகியோர் அதிகாலை 2 மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலை 5:30 மணிக்கு 14 நாட்டிகல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்தபோது காற்றின் சுழற்சியால் படகு கவிழ்ந்தது.

இதில் அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் படகில் இருந்த மீனவர்கள் இந்த நான்கு மீனவர்களையும் மீட்டனர்.

தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ். ஐ. , கதிரவன் தலைமையிலான போலீசார் விபத்து பகுதிக்கு சென்று மீனவர்களையும், படகை யும் மற்ற மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டுவந்தனர்.

தொடர்புடைய செய்தி