இருசக்கர வாகனத்தை விடுவிக்க ரூ. 2000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாதுமங்கலசாமி ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரூ.2000 லஞ்சம் கொடுத்தபோது காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு பிரிவினர் கையும் களவுமாக பிடித்து, வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஆட்சியரகப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதனை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி இன்று அக்.7 தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளர் சிறை தண்டனை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.