ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு உரிமையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

இராமேஸ்வரம் தங்குதளத்தில் உள்ள விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்லக்கூடிய மீனவர்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் மீனவர் அடையாள அட்டை நகலையும் கண்டிப்பாக மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு மீன்பிடி அனுமதிச் சீட்டினை பெற்று செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தை தொழிலாளர்களை கூட்டிச்செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.மேற்படி உரிய ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படும். 

படகின் உரிமையாளர் கவனத்திற்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களையோ, குழந்தை தொழிலாளரையோ கூட்டிச் சென்றால் தமிழ்நாடு ஒழுங்குமுறை சட்டம் 1983-விதியின் கீழ் படகு உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது

தொடர்புடைய செய்தி