விசாரணையில் தண்டவாள பராமரிப்பு பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது. அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திப்பனூர் அருகே தங்கி பரமக்குடி, மானாமதுரை பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சொன்னதை விட குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த சிலர் ஒப்பந்த நிறுவனத்தை மாட்டி விடுவதற்காக தண்டவாள கிளிப்புகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த சுரேஸ்அகரியா (24), நித்தேஸ்குமார் (21) ஆகிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.