கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றது. மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்தச் சம்பவத்தால் மீனவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து, மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.