கடந்த 8 ஆம் தேதி அதிகாலை வைகை ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை விரட்டி உள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனர் சந்திரசேகர் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் சந்திரசேகர் மற்றும் அவரது உறவினர் விக்னேஸ்வரன் நின்று கொண்டிருந்தபோது பத்து பேர் கொண்ட கும்பல் அவர்களை கடுமையாக அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த சந்திரசேகர் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், விக்னேஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.