ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வாக, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேர்களில் எழுந்தருளி, கோவிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற இந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.