இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்
செப்டம்பர் 11 ல் நினைவு நாளில். 67 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 163 (1) தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், தியாகி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வருபவர்கள்
செப்டம்பர் 9 முதல் 15 வரையில் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அஞ்சலி செலுத்த வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் சொந்த வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், வெளி மாவட்டங்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம் ரன்ஜீத்சிங் காலோன் ஆய்வு செய்தார்.