கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று உரத்தூர் மந்தையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்குப் புரவிகளை கொண்டுசென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமம் மக்கள் குதிரை சிலைகளைச் சுமந்துகொண்டு ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மருதாருடைய அய்யனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் சேமனூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்