தொடர்ந்து பரமக்குடியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததுடன் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை முட்டி தூக்கியது. இதனையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மாட்டை பிடிக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களை அச்சுறுத்தி தாக்கிவந்த மாட்டை பரமக்குடி நகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் பிடிக்க முற்பட்டனர். ஆனால் மாடு தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை கயிறு மூலம் கட்டி பத்திரமாக பிடித்தனர். தெரு நாய் கடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாடு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்